உன் பெயர்தானே

உன்னோட பெயர்தானே
என்னோட
உயிராச்சு.....நீ மட்டும்தான்
உலகமும்
என்றாச்சு.....மூச்சு
அடங்கும் வரை
உந்தன்
பேச்சு இடம்பிடிக்கும்
என்னுள்ளத்தில்.....!!

கண்ணே கண்ணே
கண்பேசிய
காலங்கள்.....கனவில்
வந்து
கண்ணீரை
காணிக்கை செய்து
போனது.....அடி
பெண்ணே
ஒவ்வொரு நொடியும்
செத்து மடியும்
வேதனை
மறந்தாயா நீ......?????

நான் கண்ட
பெண்ணும்......நான்
காணாத பெண்ணும்
காலத்தின்
கடைசிவரை
நீமட்டும்
தானடி.....காதல்
தந்த
காதல் பரிசு
நீயடி.....சாவின் விளிம்பிலும்
சத்தியமாய்
காதலிப்பேனடி.....!!!

உன் முகத்தைக்
காட்டடி.....
எந்தன் முல்லை
பூவே....பார்க்காமலே
போகிறாய்.....நானோ
தாயைத் தொலைத்த
பிள்ளைபோல.....
தவித்து
நின்றேனே.....நீதான்
அறிவாயா......??????????????

இருவிழியில்
கவியெழுத
வைத்தவள்.....
விழிநீரில்
வீழ்ந்து
தவிக்க விட்டாளே.....
உன்னழகை
நான்
ரசிக்கவில்லை.....
உன் அன்பில்
அகிலம் மறந்து
தானே நான்
வாழ்ந்தேன்.....
ஏனடி இம்சிக்கிறாய்......?????

எழுதியவர் : thampu (4-Feb-17, 3:16 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 407

மேலே