இயற்கைப் பாடல்

மழைக்கால மேகம்
தவழ்ந்தாடுதே
மலைமீது மோதி
வழிந்தோடுதே

குளிர்கண்டு மாலையில்
மயில் ஆடுதே
அந்திமழை வேளையில்
குயில் பாடுதே

ஏகாந்த நேரம்
கனை போடுதே
ஏற்காட்டுப் பூவினம்
எனைத் தேடுதே

கூட்டிற்குள் பறவை
தினம் கூடுதே
வீட்டிற்குள் உறவோ
பணம் நாடுதே

எழுதியவர் : குமார் (5-Feb-17, 2:33 pm)
பார்வை : 711

மேலே