அதுவே வேதம்

அன்றாடக் கடமைகளைப் பொறுப்பா யாற்றி
***அகம்புறமும் அழுக்ககற்றி விடுவாள் அன்னை !
அன்னமிட்டுப் பசியாற்றி உள்ளம் அறிந்தே
*** அரவணைக்கும் தாயுளமே கடவுள் இல்லம் !
அன்பென்ற ஆயுதத்தால் துயரைப் போக்கி
***அழிவின்றிக் காத்திடுவாள் அறிவைக் கூட்டி
அன்னைமொழிக் கீடுண்டோ அறிந்தோர் சொல்வீர்
***அகிலத்தில் நமக்கதுவே வேத மன்றோ ??

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (6-Feb-17, 1:36 pm)
பார்வை : 343

மேலே