அன்னை
அகிலத்தில் அன்னைக்கு ஈடேது
-- அணைக்கும் நெஞ்சமே என்றுமது
அல்லும்பகலும் காக்கும் உள்ளமது
-- அன்பெனும் பண்பின் உருவமது !
அளவிலா பாசத்தின் உறைவிடம்
-- அதிமதுர தாலாட்டும் பாடிடும்
அர்த்தமுள்ள ஆலோசனை வழங்கிடும்
-- அற்புதம் நம்வாழ்வில் தாய்மையே !
பழனி குமார்