சதிகாரன்

வாழ்வின் விளிம்பில்
இருவிழிகளில் வந்த ஒருதுளி
கண்ணீரைத் துடைக்க வந்தவன்
இன்று என்னை
கண்ணீர் கடலில்
மூழ்கடித்து சென்று விட்டான்!,

சிந்திக்க நேரமின்றி சிரித்து
வந்த என்னை இன்று
என்னையே யார்?! என்று
சிந்திக்க வைத்துவிட்டான்,

உறவுகளை வெறுத்து
அவன் ஒருவனை மட்டும்
உயிராக சுற்றி வந்தேன் அன்று
அனால் இன்று
உயிர் எல்லாம் அவனை வெறுத்தும்
உள்ளம் இன்னும் அவனை மட்டுமே
நேசிக்கின்றது,

நம்பிக்கையில்லா உலகில்
நம்பிக்கை "நீ" என்று
என்னை தேடிவந்தவன்
நீ யார்?! என்று கேட்டுவிட்டான்

நானக நான் இருந்தும்
நம்பிக்கை என்று என்னை
தேடிவந்தவனால் இன்று
நான் யார் என்று
தெரியாமல் நிற்க்கிறேன்!,

அறியாத வயதில்
ஆறுதல் என்று என்னை
தேடிவந்தவன் இன்று
என்னையே அறியாதவாறு
விட்டுச் சென்று விட்டான்,

இன்பமான என் வாழ்வில்
இனிமை என்று என்னை
தேடிவந்தவன் இன்று என்னை
இருளில் தள்ளிவிட்டான்,

சந்தேகமில்லா என் வாழ்வில்.
என்னை சாகடித்து சென்று விட்டான்
என்னை தேடிவந்தவன்...........
..............................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (7-Feb-17, 4:04 pm)
Tanglish : sathikaaran
பார்வை : 226

மேலே