உலகமொரு குடும்பம்

சுடர்மிகு அறிவிருக்கு ஒவ்வொருவருக்கும்...
சூழ்ச்சி செய்வதற்காகவா?..
அல்ல...
ஆக்கப்பூர்வமாக ஒவ்வொருவரும் செயலாற்றவே...

சிரத்தன்மை சிறந்திருக்கு ஒவ்வொருவருக்கும்...
பிறரை அடிமை கொள்வதற்காகவா??...
அல்ல...
தன்னில் அடக்கங் கொண்டு தன்னை தலைமை தாங்கவே....

சிரிக்கும் வல்லமையிருக்கு ஒவ்வொருவருக்கும்...
பிறருடைய துன்பங்கண்டு சிரிப்பதற்காகவா???...
அல்ல...
சிறு புன்னகையால் பிறருக்கு ஊக்கமளித்து எதிரியையும் நண்பனாக்கவே....

அளவற்ற கருணையிருக்கு ஒவ்வொருவருக்கும்...
தன்னை இழப்பதற்காகவா????...
அல்ல....
தனது அத்தியாவசியத் தேவைக்குப் போக மீதியை பிறருக்கு வழங்கவே....

அளவற்ற அன்பிருக்கு ஒவ்வொருவருக்கும்....
குறிப்பிட்ட சிலருக்கென தனிவுடைமை கொள்வதற்காகவா?????...
அல்ல.....
அகில மக்களனைவருடைய மனதிலும் அன்பால் பாலம் அமைத்து இந்த உலகமொரு குடும்பமென காண்பதற்காகவே....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (7-Feb-17, 6:03 pm)
பார்வை : 928

மேலே