ஈரம்

வண்ண ஆடைகளை அணிவதாலோ
பூச்சூடி பொட்டு வைப்பதாலோ
வெளியிடங்களில் உலவுவதாலோ
நட்புறவுகளோடு அளவளாவுவதாலோ
மனதை இரும்பாக்கியதாலோ
மறக்கப் பழகியதாலோ
காய்ந்து விடுவதில்லை
இருளில் இளம்விதவை நனைக்கும்
இரு தலையணைகளின் ஈரம்!!!

எழுதியவர் : அருணா சுப்ரமணியன் (8-Feb-17, 7:14 pm)
பார்வை : 157

மேலே