சீவிமுடிச்ச கொண்டையிலே

சீவிமுடிச்ச கொண்டையிலே மல்லிகைபூ வைச்சபுள்ள
ஆவியான என்னுடலை சேர்த்தணைத்து முத்தமிட்டாய்
கண்ணான பெண்ணழகில் பொன்னான உன் விழிகள்
மானாக மேய்கையிலே மீனாக துள்ளுதடி
மாணிக்கதேரினிலே மஞ்சமது காத்திருக்க
மஞ்சளவள் மேனியிலே மோகப்பூ பூத்திருக்க
கனிசுவைபோல் பெண்ணழகை
கண்ணாலே பருகுகின்றாய்
ஒய்யாற முன்னழகில் ஒதுங்க இடம் தேடுகின்றாய்

எழுதியவர் : சௌம்யா செல்வம் (9-Feb-17, 9:53 pm)
பார்வை : 81

மேலே