மேனியெல்லாம் பூத்திருக்க

மேனியெல்லாம் பூத்திருக்க
மன்னனவன் விழிநடையில்
கதையெல்லாம் பேசிடுமே
விழி பேசும் மொழியழகில்
பேதையவள் களித்திடுவாள்
கொஞ்சுமெழில் பேச்சழகில்
பூவான மேனியிலே போதையெல்லாம் ஏற்றிடுமே
மன்னவனே உன் நெஞ்சினிலே
என்னிதயம் உன்னிடத்தில்
பூவான என்னிதயம் நீ பூப்போல காத்திடவே
கொட்டும் பனிபோல குளிர்ந்து மனம் தழுவிடவே
சுட்டும் விழிச்சுடரில்
விட்டென்னை பிரியாமல்
என்னிதயம் வென்றவனே கொடியான குலமகளில்
உன்னிதயம் தாருமடி

எழுதியவர் : சௌம்யா செல்வம் (9-Feb-17, 10:06 pm)
பார்வை : 128

மேலே