மக்களாட்சி நடக்குதாம்ப்பா

கிரிக்கெட்டை உருவாக்கியவனுக்கு
கிடைக்கவில்லை உலகக்கோப்பை...!
சாசனத்தைப் படிச்சவனுக்கு
ஆசனயோகம் அமையவில்லை...!

படிச்சவன் பணி பார்த்தா
பத்தவில்லை மாச சம்பளம்..!
பணம் மட்டும் இருந்துட்டா
எவன் சொல்லும் ஏறும் அம்பலம்...!

மண்ணாலும் மன்னனையும்
மந்திரியே தேர்ந்தெடுப்பார்..!
மக்களாட்சி நடக்குதாம்ப்பா..
மக்கள் மனம் தெரியாம...!

எக்காளம் போடுதுலகம்
என் நாட்டு நிலைபார்த்து
எக்காலமும் திருந்திடாத
கற்கால மனிதர் நாங்கள்...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (10-Feb-17, 2:47 am)
பார்வை : 278

மேலே