அசலா

நிழல்
நிஜமாவதில்லை என்றும்..

தலைகீழ் பாடங்கள்
தருவதில்லை கல்வித் தரத்தை..

கானல்நீரைக்
கண்ட கண்களால்
கொஞ்சமும் தீராது தாகம்..

தண்ணிபோட்டுவிட்டு
தலைகீழாய் நிற்பவனுக்குத்
தெரியாது உலகம் நேராய்..

இப்படித்தான்
இப்போது மனிதன்-
தன்னிடம் குறையுடன்
திருத்தப்போகிறானாம் உலகை,
திருந்துவானா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Feb-17, 7:16 am)
பார்வை : 92

மேலே