அசலா
நிழல்
நிஜமாவதில்லை என்றும்..
தலைகீழ் பாடங்கள்
தருவதில்லை கல்வித் தரத்தை..
கானல்நீரைக்
கண்ட கண்களால்
கொஞ்சமும் தீராது தாகம்..
தண்ணிபோட்டுவிட்டு
தலைகீழாய் நிற்பவனுக்குத்
தெரியாது உலகம் நேராய்..
இப்படித்தான்
இப்போது மனிதன்-
தன்னிடம் குறையுடன்
திருத்தப்போகிறானாம் உலகை,
திருந்துவானா...!