பூகோள பிரசவம்
நல்லதா சொல்ல
நாலுபேரு இல்ல
நயவஞ்சகத்த
நாயகியா வணங்குது
நரிக்குப் பிறந்த புள்ள
தமிழ்த்தாய சரிச்சிப் போட்டு
உச்சந்தலையில ஏறுதுங்க வேதாளம்
வேளா வேளைக்கு
ஆகாரம் தந்த மண்ணும்
போகுதுங்க பாதாளம்
நாட்டுக்கு வரும்
நடுக்கம்தான் இதுக்கு ஆதாரம்
இயற்கைக்கு ஆகும் சேதாரம்
இன்னுமிருக்கு தாராளம்
நீதி இழந்த பூமிப் பந்து
தெற்கே நொந்து நொந்து
சாய்வதென்ன அதிசயம்
தமிழ் நாட்டு ஜாதகத்தை
தூசித் தட்டிப் பார்க்கிறேன்
ஊசிக் காடாத்தான் மாறப்போகுது - இது
பூகோள பிரசவம்
புதுக்கவிதையில இரகசியம்