மணம் வலிக்கும் காதல் இது

தனசேகருக்கு கல்யாணம் ஆகி ஆறு மாதம் தான் இருக்கும்..
ஆனால் இப்படி ஒரு இடி இங்கே விழுந்த்திருக்க கூடாதுதான்...
என்ன செய்வது விதி இங்கே விளையாடி கொண்டு இருக்கிறது.
தனசேகரின் தாய் ஜானகி இதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டு வெளிநாட்டில் இருக்கும் தன் கணவருக்கு பட்டு படாமலும் சில விஷயங்களை அவ்வப்போது தொலைபேசி வழியாக சொல்லி கொண்டு இருக்கிறாள்...தன் கணவனின் பதிலும் எல்லாம் போக போக சரியாகும் என்றுதான் ஆறுதல் படுத்தி கொண்டு இருக்கிறான்.

எப்படியோ முக நூல் வழியாக தனசேகரின் கண்களில் மலர்ந்தவள் தான் ஆர்த்தி . பார்த்ததும் காதல் இருவருக்கும் இவர்களின் கண்களில் நடனம் ஆட தொடங்கி உள்ளது...முக நூல் வழியாகவே முடிவில்லா காதல் நடனம் . உச்ச கட்டத்தில் அரங்கேறி கொண்டு இருக்கிறது..

இந்த சூழ் நிலையில் ஜானகியின் காதுகளுக்கு இவ் விஷயம் வர தொடங்கியது...மெல்ல மெல்ல தனசேகரிடம் விசாரிக்கிறாள் ஜானகி.

தனசேகரும் உண்மையை ஒத்து கொள்கிறான்.தன் வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது ஆர்த்தியோடதான் என்று பிடிவாதமாய் சொல்லிவிட்டான்..

இந்த நிலையில் வெளிநாட்டில் இருக்கும் தன் கணவரிடமும் விவரத்தை சொல்லி சம்மதம் கேட்கிறாள் ஜானகி...
என்ன செய்வது ஒரே மகன் அவனின் விருப்பத்திற்க்கே நடக்கட்டும் என கணவன் மனைவி இருவரும் சம்மத்தித்து.

முறைப்படி பெண்கேட்டு நிச்சயத்து நல்லபடி நடந்த திருமணம்தான்...

அமைதியின் சிகரம் தான் தனசேகர்.. நல்ல நண்பர்கள் நாலு பேர்தான்...தெய்வ பக்தி கொண்டவன் தான்...கெட்ட பழக்க வழக்கம் கூட இல்லாதவன்
பிடிவாத குணம் இருந்ததாலும் பிடிக்கும் படிதான் நடந்து கொள்வான்..
ஏன் இவனின் வாழ்க்கையில் விதி இப்படி விளையாடுகிறது புரியவில்லை...

ஆர்த்தி உருவத்தில் சற்று பெருத்திருந்தாலும் குணத்தில் நல்ல பெண்...முழு மதி நிலவாய்த்தான் அவளின் முகம் பரிதிபலிக்கும் .
பேசும் போது கூட அவளின் குரல் மெல்லியதாக தான் இருக்கும்...நல்ல பெண் சான்றிதழ் கூட கொடுத்துவிடலாம்..அந்த பெண்ணுக்குத்தான் அவளின் வாழ்க்கையில் இப்படி ஒரு இடி முழக்கம்..

காரணம் இவள் பிறந்த நாள் முதல் இவளின் அம்மாவும் , அப்பாவும் அடிக்கடி போட்டு கொண்ட சண்டைதான்.இவளின் கண் முன் அடிக்கடி பிரிதிபலித்து கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லை இவளுக்கு கூட பிறந்த அக்கா உயிருக்கு உயிராய் நேசித்த சகோதரி குடும்ப பிரச்சனை காரணமாக மொட்டை மாடியில் இருந்து தற்கொலை. இதை நேரில் பார்த்த ஆரித்தயால் தாங்கி கொள்ள முடியவில்லை. அதில் இருந்து
மனநிலை பாதிப்பு ஏற்பட்டு சில நேரங்களில் நாம் என்ன செய்கிறோம் எனபதை அவளால் யோசிக்க கூட முடியாது...பல இரவுகளில் தூக்கம் இல்லாமல் தவித்து இருக்கிறாள்...இவளின் வித்தியாசமான செய்கைகளை பார்த்து ஆரித்தின் பெற்றோர் மருத்துவரை அணுகிய போது தான் தெரியவருகிறது... ஆரித்திக்கு கடுமையான மண நிலை பாதிப்பு என்று...
பல ஆண்டுகளாய் சிகிழ்ச்சி பெற்று வரும் இந்த ஆர்த்தியை தான் அறியாமல் காதலித்து திருமணம் அரங்கேற்றம். நடத்துகிறான் தனசேகரன்..
தனசேகருக்கு திருமணமாகி சில நாட்கள் சந்தோஷத்தை அனுபவித்து இருக்கிறான்... பல நாட்கள் வேதனையை மட்டுமே அனுபவித்து இருக்கிறான் .
ஆர்த்தி இரவு நேரத்தில் சில மாத்திரை சாப்பிடுவது வழக்கம். இதை அறிந்த தனசேகர். இதை பற்றி அவளிடம் கேட்கிறான்..நெஞ்சு வலிக்கு சாப்பிடுவதாக சொல்கிறாள் ஆர்த்தி...
இப்படித்தான் சொல்லி பல வாரங்களையும் , மாதங்களையும் அவனுடன் இவள் கழித்து வந்தாள்...
மாதம் மாதம் அம்மாவை பார்க்க போவதாக சொல்லி அம்மா வீட்டுக்கு போய் தனக்கு தேவையான மாத்திரை வாங்கி வைத்துக்கொள்வாள்
இவ் விஷயம் தனசேகருக்கு தெரியாது...
தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டும் கூட இரவில் தூங்குவது கிடையாது...தனசேகர் நன்றாக தூங்கும் சமயத்தில் தலையணையை வைத்து அவனின் முகத்தில் வைத்து அழுத்துவது... ஏதாவது சொல்லி சண்டை இடுவது...அவனை அடித்து துன்புறுத்துவது ...சில நேரத்தில் இவர்கள் இருவரும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது தாம்பத்தியம் முழுமை அடையாமலே பாதியில் விட்டு நகர்ந்து விடுவது..இப்படித்தான் இந்த ஆறு மாத வாழ்க்கை இப்படித்தான் போய் கொண்டு இருக்கிறது ...எல்லாம் சகித்து கொண்டுதான் தானாகா தேடி கொண்ட வாழக்கை என நினைத்து கொண்டு வெளியே சொல்லாமல் அத்தனையும் மறைத்து கொண்டு அவன் அவளுடன் வாழ்ந்து வந்தான்.
ஒரு கட்டத்தில் அவனின் உயிருக்கே ஆபத்து வரும் சமயத்தில் வெளியே சொல்கிறான்...
இதை கேட்ட தனசேகரன் குடும்பத்தார் மிகவும் வேதனைக்கு உள்ளாகின்றனர்....
ஆர்த்தி தொடர்ந்து சாப்பிட்டு வரும் இந்த மாத்திரை குறித்து மருத்துவரிடம் விசாரித்திருக்கிறாள் ஜானகி...
இந்த மாத்திரை சாப்பிடும் இந்த பெண் குழந்தை பெற்று கொண்டால் குழந்தைக்கும் மண நிலை பாதிப்பு உண்டாகும் ..இந்த மாத்திரை சாப்பிடுபவர் தற்கொலைக்கு தூண்டும் ..நினைவுகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறுபடும் என்று மருத்துவரின் கருத்தாக இருக்கிறது .

இந்நிலையில் இருவரும் சேர்ந்து வாழ்வதா? இல்லை பிரித்து விடுவதா ? வாசகர்களே நீங்களே சொல்லுங்கள்.

எழுதியவர் : மன்சூர் அலி சவூதி அரேபியா (13-Feb-17, 2:40 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 366

மேலே