என் கணவன் என் தோழன்

️❤️..........என் கணவன் என் தோழன்........❤️

அதிகாலையில் எனை எழுப்பி அவன் தரும்
சக்கரையில்லாத தேநீர்...
முன் விழும் முடி ஒதுக்கி நெற்றியில் அவன் பதிக்கும் உதடு ஒட்டாத முத்தம்..
குறுகுறுப்பூட்டும் அவன் குறுந்தாடியின்
இன்பம் தரும் இம்சைகள்...

என் சேலை முந்தானையில் தலை துவட்டுகையில் அவன் செய்யும் அத்தனை குறும்புகளையும் கண்டு கனல் கக்கும்
சூரியனும் திரைச்சீலையின் பின்னே ஒளிந்து கொள்ளும் காலைப்பொழுதுகளில்
இல்லாத வெட்கமும் எனைத்தேடி வந்து
ஒட்டிக் கொள்கிறது.....

சின்னச் சின்னச் சண்டைகள்..
அவன் அணைப்போடு உறங்கும் இரவுகள்.. சிறு பிள்ளைத்தனமான விளையாட்டுக்கள்..
செல்லமான சீண்டல்கள்...
என்னைத் தொடும் அவன் மென்மையான தீண்டல்கள்...
தேநீரை மிச்சம் வைத்து இதழ் முத்தத்தில் முடியும் அந்த சில நிமிடங்கள்...

அவனுள் நான் தோற்று எனக்குள் அவன் தோற்கும் ஒவ்வொரு மணித்துளிகளிலும்
புதிதாய் நானும் பிறக்கையில் புது மலராய் என்னைத் தாங்கும் அவன் அன்பில்
தினமும் நான் என்னை மறந்து தான் போகிறேன்....

என் சின்னச் சின்ன ஆசைகளையும் நினைவில் கொண்டு நிறைவேற்றிடும் இனிய தருணங்கள்...
மடி சாய்ந்து மழலையாய் உறங்கும் நொடிப் பொழுதுகள்..
என் மூக்கோடு உரசிச் செல்லும் அவன் சுவாசங்கள்...
விரலோடு விரல் கோர்த்து கடல் அலையோடு
கால் நனைக்கும் நிமிடங்கள்...

அவன் தோளோடு நான் சாய்ந்து அவன் விழிகள் சொல்லும் காதலை எனக்குள் நானே மொழிபெயர்த்துக் கொள்ளும்
அந்த மௌனமான தருணங்களில் காதலில்லாமல் அவன் கரம் பிடித்த
கல்யாண நினைவுகள் என் கண் முன்னே தோன்றி கண்ணடித்துச் செல்கின்றன....

என் வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளிகளிலும் உயிர்த்தேனை கலந்து
காதலுக்குள் வாழ வைத்துக் கொண்டிருக்கும் அவனின் நேசத்திற்கு என் காதல் மொத்தமும்
குடுத்தும் அவனுக்குள்ளேயே தினம் தினம் தொலைந்து நானும் போகின்றேன்....

அறுபது வருடங்கள் கடந்தும் இன்றும்
அன்று போல் என்னை எனக்காக மட்டுமே காதலித்துக் கொண்டிருப்பவன்....
என் தோழனாய் காதலனாய் என் உயிர்க் கணவனாய் எனக்கு அனைத்துமாகி
நிற்கும் அவன் தளர்ந்து போய் என் கரம் பிடிக்கும் வேளைகளில் என்றும் அவன் எனக்கு முதல் குழந்தை தான்....

இறக்கும் இறுதி நொடியிலும் அவன் கண்கள்
சொல்லும் காதலை கண்டவாறே என் கண்களை நானும் மூடிட வேண்டும்..
என்னோடு இணைந்தே அவனும் விண்ணுலகம் வந்திட வேண்டும்...
அவன் என் அருகில் இல்லாத ஒவ்வொரு துளிகளும் அது சொர்க்கமேயென்றாலும்
எனக்கது நரகம் தான்....

( இது கவிதையல்ல முதுமையிலும் இளமையோடு காதலித்துக் கொண்டிருக்கும் காதல்பறவைகளின் காதல் காவியம்)

❤️❤️❤️❤............️.......சகி..................❤️❤️❤️❤️

எழுதியவர் : அன்புடன் சகி (14-Feb-17, 12:10 pm)
பார்வை : 3755

மேலே