காதல் காதல் காதல்
நொடிப்பொழுதில்
உள்ளத்தில்
இடம் பிடிக்கும்
ஒரு நொடி
பிரிந்தாளோ
உடனே சேர
அடம்பிடிக்கும் !
அடிமனதில்
கவிதைகள்
ஆயிரம்
உதிக்கும்
நம்மை மீறியே
நம் உதடுகள்
தினம்
சிரிக்கும்
இயற்க்கை அழகு
அனைத்தையும்
தூது போக
உடன் அழைக்கும்
உலகமே
உன்னை
நேசித்தால்தான்
உண்மையில்
மனிதஇனமே
உயிர்பிழைக்கும் !