காதல் காதல் காதல்

நொடிப்பொழுதில்
உள்ளத்தில்
இடம் பிடிக்கும்

ஒரு நொடி
பிரிந்தாளோ
உடனே சேர
அடம்பிடிக்கும் !

அடிமனதில்
கவிதைகள்
ஆயிரம்
உதிக்கும்

நம்மை மீறியே
நம் உதடுகள்
தினம்
சிரிக்கும்

இயற்க்கை அழகு
அனைத்தையும்
தூது போக
உடன் அழைக்கும்

உலகமே
உன்னை
நேசித்தால்தான்
உண்மையில்
மனிதஇனமே
உயிர்பிழைக்கும் !

எழுதியவர் : சூரியன்வேதா (வேதபாலா) (14-Feb-17, 8:07 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 610

மேலே