உன் நிழலுக்கு துணையாக வருகிறேனடி நான் 555

என்னவளே...

நான் பகலைவிட இரவையே
அதிகம் நேசிக்கிறேன்...

விழிப்பைவிட துயிலை
விரும்புகிறேன்...

நினைவுகளைவிட கனவுகளை
அதிகம் வரவேற்கிறேன்...

உலகம் என்னும் மேடையில்
கனவு நாடகம் தினம் தினம்...

நித்திரை நினைவில் நீ
வந்தால் கனவில் வருவதில்லை...

கனவில் வந்தால்
நிஜத்தில் இல்லை...

கனவும் நித்திரையும் சேர்ந்து
வந்தால் நீ வருவதில்லை...

உன் நிழலுக்கு துணையாக
வரமுடிந்த என்னால்...

உன் இதயத்தை தொடர
தெரியவில்லையடி...

என்மீது உனக்கு கொஞ்சமும்
இரக்கமில்லையா சொல்லடி கண்ணே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Feb-17, 8:19 pm)
பார்வை : 375

மேலே