காதலின் அரிச்சுவடி

எதுகை மோனை கூட எழுதிப் பார்த்ததில்லை
வெண்பா என்றாலே சம்பா ரகம் போன்றே நினைத்திருந்தேன்...

குறில் நெடில் அரை மாத்திரைகூட அறிந்திருக்கவில்லை
ஆசிரியப்பா பள்ளிப் பருவத்தில் படித்த நினைவாகவே இருந்திருக்க...

இலக்கணங்களைப் பற்றி நான் ஆராயத் தொடங்கியதே
இயற்றமிழ் நாயகி எனை ஈர்த்த நாட்களுக்குப் பிறகுதான்...

#சந்தியில்_நின்று_சந்தப்பிழைகொடுத்த_சாபமாய்
#மந்தையில்_மாட்டிக்கொண்டது_என்காதல்

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (17-Feb-17, 7:22 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 157

மேலே