தேனாறு சொல்லும் தெவிட்டாத இன்பம் - இரு விகற்பக் குறள் வெண்பாக்கள்
#இணையம் தருமா மிணைப்பாகும் நட்பின்
பிணைப்பாய் வருதலும் பின்பு .
#காதல் சுகமெனக் காலம் நினைக்கவும்
மோதல் விடுப்பர் மொழிந்து .
#உண்மை உரைத்த லுலக நெறியாகும்
பெண்மையும் போற்றுதல் பேறு.
#நிரந்தர மென்பது நித்திய மில்லை
வரந்தரும் தெய்வம் வனைந்து .
#நேரம் வரும்வரை நேரிழையாள் காத்திருக்கத்
தார மினிதான் தகும் .
#மனநிலை நல்லதாய் மண்ணுலகி லுண்டாம்
கனவும் நிசமாகும் கண்டு .
தேனாறு சொல்லும் தெவிட்டாத இன்பத்தால்
தானாக வெண்பா தரம் .
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்