எழுசீர்ச் சந்த விருத்தம்

கூவத் தூரிளொரு கூவ மோடியதில்
குளிக்க வேகனவு வளருதே
பாவத் தோடுபல பாவி கூடியதில்
பலிக்க வேநினைவு பெருகுதே
காவல் மீறிவர காத தூரமதில்
கிடைத்த போதைமது சுவையிலே
ஏவல் காரிகையை ஏக கடவுளென
இசைந்து பாடிவிட இசையுதே!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (17-Feb-17, 2:02 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 71

மேலே