உங்களில் எவரேனும் கண்டதுண்டா

உங்களில் எவரேனும் கண்டதுண்டா?
என் கற்பனை பறவைதனை??

பல நிறமுடைய பறவையது!!!
பாரினில் அது போல் வேறு எங்கும் கண்டதில்லை!

ஏழை மகள் என்னுடன் -பழைய சோறுண்டு பசியாறும்!!

அதன் விரிந்த-- சிறகுகளுக்குள் !!!
அண்டிக்கொண்டே வாழ்ந்து வந்தேன்!!! -அதன்

அழகிய தனி பிரபஞ்சத்தின் முடிசூடா ராணி நான்!!

என் திருமணநாளில் கடைசியாய் நான் அதை பார்த்தேன்....!!!!

மொய் எழுதும் மேடைமீது...தன் மெய்யிழந்து நின்றதே அது!

என் மறுவீட்டு அழைப்பின் பின்!
அதை மறுபடியும் பார்க்கவேயில்லை!!

என் நீண்ட விழி மூடா இரவுகள் என் கற்பனைப்பறவைக்காய் தவமிருக்க!!!

உங்களில் எவரேனும் கண்டதுண்டா?
என் கற்பனை பறவைதனை??

எழுதியவர் : விஜயராணி (18-Feb-17, 10:03 am)
பார்வை : 100

மேலே