ஏறு தழுவல்

ஏறு தழுவல் இது!

எவர் சொன்னார்??
மாட்டுக்கும் மனிதனுக்குமான விளையாட்டு என்று?

இருவேறு- இன சகோதரருக்கான தழுவல் இது!!!
ஆம்

சீறிவரும் காளைக்கும் பாய்ந்து வரும் காளையருக்கும்!!!
ஏறு தழுவல் இது!

நாயொன்று ஓடிவர நாவெட்டில் வீட்டையெட்டும் மரமனிதனுக்கு என்ன தெரியும்?
ஆயுதமின்றியே அசராது நிக்கும் எம்மறவர் பண்பாடு?????

பாட்டனுக்கும் முப்பாட்டனுக்கும் முந்தைய வீரம் இது!!!

தன் தாய்பாலுடன் வீர பாலையும் ஊட்டி வளர்த்த வீர தமிழச்சியினை-
பீட்டாவின் தாத்தா அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்??!!!

வாயில்லா ஜீவன்கள் வதைப்படுகிறதா?

வாருங்கள் மாட்டுப்பொங்கலுக்கு!!!
காணுங்கள் மண்ணின் பெருமையை!!.

காலங்கள் பல கடந்தாலும்! எம்
கடந்தகாலம் யாம் மறவோம்!!!!
.

எழுதியவர் : விஜயராணி (18-Feb-17, 10:45 am)
பார்வை : 126

மேலே