மாறிடுமா​ இந்நிலை ​

சாத்திரம் கூறுதென கூச்சலிடும் மாக்களே
கோத்திரம் குலமென ஆய்ந்துப் பார்ப்பவரே
விபத்து என்றவுடன் ஓடிவந்து உதுவுகிறானே
அவனென்ன சாதிமதம் அறிந்தா வருகிறான் ?

கோடிகளை கோவில் உண்டியலில் திணிப்பவர்
வாசலில் நிற்பவரின் வாழ்வின் நிலைகண்டும்
ஏளனப் பார்வையுடன் ஈரமிலா நெஞ்சுடனே
கடந்து செல்வதுதான் காணும் காட்சியிங்கு !

மாறிடுமா இந்நிலை மண்ணில் இனியேனும்
வறுமையும் மறையுமா ஏழ்மை ஒழிந்திடுமா !


​ பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Feb-17, 7:55 am)
பார்வை : 310

மேலே