மாறிடுமா இந்நிலை
சாத்திரம் கூறுதென கூச்சலிடும் மாக்களே
கோத்திரம் குலமென ஆய்ந்துப் பார்ப்பவரே
விபத்து என்றவுடன் ஓடிவந்து உதுவுகிறானே
அவனென்ன சாதிமதம் அறிந்தா வருகிறான் ?
கோடிகளை கோவில் உண்டியலில் திணிப்பவர்
வாசலில் நிற்பவரின் வாழ்வின் நிலைகண்டும்
ஏளனப் பார்வையுடன் ஈரமிலா நெஞ்சுடனே
கடந்து செல்வதுதான் காணும் காட்சியிங்கு !
மாறிடுமா இந்நிலை மண்ணில் இனியேனும்
வறுமையும் மறையுமா ஏழ்மை ஒழிந்திடுமா !
பழனி குமார்