குபேரனாக்கும்

அறிவியல் உலகம்
அதி உன்னத உயரம்
இறைவன் தந்ததல்ல
இன்றைய மனிதன் வடித்தது

உயிரை படைத்த இயற்கை
வாழ வழிகாட்டியது,
சுகத்தைத் தேடியபோது—மனிதன்
சிந்திக்கத் தொடங்கினான்

அறிவு தலையிலேறி அமர
அரங்கேற்றம் கண்டது
ஆசையும், பேராசையும்—குவிந்தன
அளவிலா அறிவியல் பரிசுகள்

ஆசை இல்லையென்றால்
அறிவு சாதிக்குமா?
நாடேது? மொழியேது?
நாகரீகமும் தான் ஏது?

அன்று வாழ் மக்கள்
அமைதியாய் வாழ்வதற்கு
ஆசையைத் துறக்க--புத்தன்
போதித்தான் மக்களுக்கு

இன்றைய மக்களுக்கு
இன்றியமையாதது தரமான வாழ்வும்,
சீரான செல்வசெழிப்பும்—அதற்கு
ஆசைகள் அவசியம் தான்

எது நல்லது, எது கெட்டது
என்பதனை அறிந்து
அதன்படி செயல்பட்டால்—மனிதனை
ஆசையும் குபேரனாக்கும்.

எழுதியவர் : கோ.கணபதி (19-Feb-17, 1:16 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 73

மேலே