அழையா விருந்தாளி

அழையா விருந்தாளி!

அழையா விருந்தாளி
நுழையும் இதையத்தில்!
இருக்க இடம் கொடுத்தால்
படுக்கும் பாய்போட்டு!

மின்னலாய் எண்ணங்கள்
இடியாய் நினைவுகள்
மழையாய் கண்ணீர்
காரணம் காதலே நீதான்!

அவன்தான் துணை
என்று முடிவானதை
நினைத்து பார்த்து
மகிழ்கின்றேன்

நகர மறுக்குது நாட்கள்
நகட்டி பார்கிறேன் நானும்
தனியாய் இருக்க மனமில்லை
தோழிகளுடன் கழிக்கிறேன் பொழுதை!

விதை விதைக்கும் நேரத்தில்
மகசூல் பெருக்கம் நினைபதுபோல்
மணநாளுக்கான நாட்களை கணக்கிடுகையில்
மக்கள் பெருக்கம் வருசையாய்!

கனவிலே ஒத்திகை நடக்குதே
காதலில் காத்திருப்பதும் சுகமே!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (19-Feb-17, 7:31 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 190

மேலே