குறும்புக்காரி
குறும்புக்காரி:
தொப்புள்கொடியை அறுத்தவுடன், தாய்ப்பாசம் முடிவதில்லை!
கதிரவன் மறைத்தாலும், ஒளி தராமல் இருப்பதில்லை!
இலைகள் உதிர்ந்தாலும், செடிகள் இறப்பதில்லை!
அதுபோல்,
இடைவெளி வந்தாலும், நம் நட்பில் விரிசல் ஏற்படுவதில்லை!
ஏனேனில்,
நம் இருவர் மனதும் சிநேகிதம் எனும் கயிறால் இறுக்கி கட்டப்பட்டுள்ளது!
குறும்பாக நீ அனுப்பிய
குறுந்செய்திக்கு,
குசும்பாக நானளித்த பதில்,
குறுநகையை ஏற்படுத்தியது, உன் முகத்தில்!
குறுகிய காலமாக இருந்தாலும்,
குதுகலமாகத்தான் இருந்தது!
அப்பாவிப்போல் இருந்துக்கொண்டு, நீ செய்யும்
அழகான சேட்டைகள்,
அடிப்பாவி ரகம்!
இப்பொழுதும் கேட்கிறது என் மனதில்,
பேருந்துகளில் நாம் பேசிய பேச்சுக்கள்!
தொடர்வண்டியில் கொடுத்த தொந்தரவுகள்!
மிதிவண்டிகள் வாங்கிய மிதிகள்!
இவற்றிற்கு உள்ளே பதுங்கி உள்ளது,
நம் தோழமையின் சுவாசங்களும்!
அதன் நேசங்களும்!
பாசங்களும்!!
-அகரன்.