என் செல்லமே
என் பேனா பக்கங்களை தொடும் போது
தாவி என் பேனா கேட்கும்
உன் பிஞ்சு விரல்களின் அழகும்
நான் கொட்டாவி விடும் போது
அதிசயமாய் விழி விரிக்கும்
உன் மழலையின் வியப்பும்
சிணுங்கிய தொலைபேசியை
கேட்டு சிணுங்கும்
உன் செல்ல அழுகையும்
முட்டு.. முட்டு விளையாட்டில்
என்னை முட்டி கள்ளமாய் சிரிக்கும்
உன் ஓரவிழி அழகும்
முத்தம் என்ற பேரில்
என் கன்னத்தில் எச்சிலால் நீ வரைந்த
தூரிகையில்லா ஓவியமும்
தும்மியதும் நான் கூறப்போகும் " அல்ஹம்துலில்லாஹ் "
வார்த்தைக்காய் முகம் நோக்கும்
உன் ஈமானியமும் துன்யாவிலும் ஆஹிராவிலும்
ஒளிவீசட்டும்