மனதில் ஓர் கீதம்
மனதில் ஓர் கீதம்
தென்றலில் பாடும் ராகம்...!
கார்கூந்தலை மீட்டி
இதழ்வரியில் உண்டாக்கும் ஸ்வரம்...!
ஏற்ற இறக்கமாய் நெஞ்சில் பாயும்
சீரான மூச்சுக்காற்று...!
மனதில் தொலைந்து போகும்
இவள் பாவம்...!
என்னோடு மௌனமாய் கொஞ்சி
பேசும் அபிநயம்...!
பரந்த பால்வழி அண்டத்தில் நடுவே
நிலவோடு நிலவாய்
இந்த இரவின் மடியில்
தலைசாய்கிறோம் ஓர் உயிராய்...!
-J.K.பாலாஜி-