பயனில்லாத கண்கள்

அவள் முன்னே வரும்போது
பார்க்கத் துணிவில்லாமல் தவறவிட்டுவிட்டு
என் பின்னே இருக்கும்போது
வேண்டினேன் தெய்வத்திடம்
" எனக்கு பின்னாலும் கண்களைக்கொடு...
அது யாரும் அறியாவகையில் வைத்துக்கொடு..." என்று.
தெய்வத்தின் பதிலாய்க் கேட்டது
"அவளைப் பார்க்கத் தவிர்த்த போதே
இருந்தும் பயனில்லாத குருட்டுக்
கண்களைப் பிடுங்கி இருக்க வேண்டும்" என்று.
என்று பிடுங்குவான் என்று
அவள் நினைவுடன் காத்திருக்கும் நான்...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (20-Feb-17, 9:49 am)
பார்வை : 158

மேலே