நாடு மாறிப் போச்சு - நாட்டுப்புறப் பாடல்

காவிரியாறு கடலென ஓடியது - அந்தக்காலம்
காவிரியாறு வற்றிப்போனது - இந்தக்காலம் .
நெல்லும் பயிரும் நீரும் இருந்தது -அந்தக்காலம்
நீண்ட வரிசையில் ரேஷன் கடையில்
நிற்க வேண்டியது -இந்தக்காலம்



வேளாண் மக்கள் வாழ்ந்து வந்தது -அந்தக்காலம்
ரியல் எஸ்டேட் காரர் நாசமாக்கினர் - இந்தக்காலம்
ஆற்று நீரில் துள்ளி மீன்கள் துள்ளித் துள்ளித்
விளையாடியது -அந்தக்காலம்
சோற்றுக்கே சோகமாய் துன்பப் படுவதும்
நிற்க வேண்டியதும் -இந்தக்காலம் .



பாலும் தேனும் மிகுந்து இருந்தது - அந்தக்காலம்
பட்டினியால் மக்கள் அவதிப் படுவது -இந்தக்காலம்
பருவமழையோ கொட்டித் தீர்க்குமே - அந்தக்காலம்
பஞ்சம் தன்னில் பரிதவிக்குமே - இந்தக்காலம்
நெடிய மரங்கள் நம்மை நின்றுப்
பார்த்து நம்மை அழைக்குமே - அந்தக்காலம்



நிறைய அபார்ட் மென்ட்டுகள் அன்னார்ந்து
நம்மை பார்க்குமே - இந்தக்காலம்
வீட்டிற்கு ஒரு மரமென வளர்ப்பது -அந்தக்காலம்
வீட்டிற்காக மரத்தை அழிப்பது -இந்தக்காலம்
ஆலையின் புகையும் ;வாகன புகையும்
அதிகம் இல்லாது இருந்தது -அந்தக்காலம்



விண்ணின் மழைத்துளி மண்ணில்
விழுந்தது -அந்தக்காலம்
விஞ்ஞானம் தன்னில் அஞ்ஞானம்
ஆனது - இந்தக்காலம் .


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Feb-17, 6:32 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 72

மேலே