சில பெண்களின் நிறைவேறா ஆசைகள் - சகி

கானல் நீராய்
சிலரின் வாழ்க்கை....

அருகிலிருக்கும் தருணங்களில்
அவர்களின் வலிகள் தெரிவதில்லை......

தூரத்திலிருந்து பார்ப்பதற்கு
மட்டுமே தெரியும் .....

வரதட்சணை எதிர்பார்த்து
வந்துசெல்லும் மாப்பிள்ளை
படலம் ...

இவ்வாழ்க்கையாவது கைகூடி
மணமகளாய் மணவறை
ஏறி மணமாலை மாற்றி
மாங்கல்யம் நிச்சயம்
சூடுவேனென்று எண்ணி
கனவுடன் விடியல்களை
காண்பாள் .....


வந்துசெல்லும் கூட்டமோ
பணத்தையும் பவுனையும்
எதிர்பார்த்து அவள் எண்ணங்களில் ஏமாற்றங்களை
தந்து செல்வார்கள் ......


தன தோழிகளுக்கும்
தன்னைவிட சிறியவர்களுக்கு
குழந்தைகளுடன் குடும்பத்துடன்
கண்டு மகிழ்வாள் .....

ஊரார் தன்னை
ஏளனமாக பார்ப்பதையும்
காதுப்பட பேசும்
காயம் தரும் வார்த்தைகளும்
அவளின் இதயத்தில் முற்களையும் கொண்டு
குத்தும் வலிதான்.......

எத்தனையே பெண்கள் கன்னிகளாய் வலிகளை
அனுபவித்துக்கொண்டு தான்
வாழ்கிறார்கள் ........

தனிமையின் வலிகளும்
வாழ்க்கையின் வலிகளும்
என்றும் மாறாத வலிகள் தான்

எழுதியவர் : சகி (20-Feb-17, 8:54 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 78

மேலே