சிந்திக்கும் வேளையிது

*********************************

இதயமிலா மனிதன்
இழக்கிறான் மனிதம் ..
நேயமற்ற நெஞ்சமவன்
நேர்வழியை மறக்கிறான் ..
ஈரமிலா உள்ளமவன்
ஈனப்பிறவியாய் மாறுகிறான் ...!

மலர்களை கசக்கி
எறிந்தக் காலமன்று
தளிர்களையே அழிக்கும்
கொடூரம் இன்று ....

பருவமடையா பால்ய
உயிர்களோ
பாலியல் கொடுமையால்
மரணமிங்கு ....

பதவி மோகமோ
வெறிபிடித்து ஆடுது ...
கோடிகளைக் குவிப்பதில்
போட்டியே நடக்குது ...

முன்னேற்றம் காண
முழுவீச்சில்லை ...
முதல்வர் ஆவதில்
முனைப்பிங்கு ...

கொட்டிக் கிடக்குது
பிரச்சினைகள் ...
முட்டி மோதுது
வெட்டிப் பேச்சுக்கள் ....

சிந்திக்கும் வேளையிது
மறவாதீர் ....
முடிவெடுக்கும் நேரமிது
விழித்தெழுவீர் ....

பழனி குமார்
20.02.2017

எழுதியவர் : பழனி குமார் (20-Feb-17, 10:36 pm)
பார்வை : 372

மேலே