மின்னஞ்சல்
இது நடந்து ஒரு இருபது வருடங்கள் இருக்கலாம்.
நண்பர் ஒரு வெளி நாட்டு தூதரகத்தின் தகவல் தொடர்பு அதிகாரி. அவ்வழி சென்றபோது அவரைக் காணச் செனறேன். எல்லா அனுமதிகள் பெற்று அவர் இருக்கை முன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது திடீரென "என் பேரன் எனக்கு மெயில் அனுப்பியிருக்கான் பார்க்கறீர்களா முரளி" என்றார்..
அமெரிக்காவில் இருக்கும் அவர் பெண்ணுக்கு மூன்று மாதம் முன்தான் குழந்தை பிறந்திருந்தது. எப்படி என்ற யோசனையி்ல் நானிருக்க கணினியை திறக்க, மூன்று மாத குழந்தையை விட்டு கீ போடை தட்டவிட்டு தாத்தாவுக்கு மின்னஞ்சல்.
இங்கு தாத்தா முகத்தில் கோடி சூரியன்.
------முரளி