பாரதிதீ

பாரதி(தீ)...
மானுடம் போற்றிவைத்த மகாகவி நீ
தேன்மொழி பாடிநின்ற தமிழ்கவி நீ
கண்ணம்மாவின் காதல்மன்னன் நீ
செல்லம்மாவின்
மாணவாளனும் நீ
கண்ணனின் வாஞ்சை நீ
காவியத் தலைவன் நீ
பாமரனின் பிடிமானம் நீ
பாரத தீயும் நீயே
நடைகண்டு படையஞ்சும்
உடைகண்டு உலகஞ்சும்
கடைவிழி சொரியும் தமிழ்வீரம்
விடையொழி வீசும் தமிழ்மொழி
நின்பா நுழையாமல் ஏதுண்டு
பண்பாடு பேசாத பா உண்டோ
உன்கீர்த்தி சிறைகொள்ள வார்த்தை உண்டோ
உனை பேசாதோர் மனம் மனிதரொன்றோ...

எழுதியவர் : சி.ஜெயராணி (21-Feb-17, 9:51 am)
சேர்த்தது : சி ஜெயராணி
பார்வை : 141

மேலே