பாலைவனத்து ரோஜா
பாலைவனத்தில் தென்றலுக்கு
காத்திருந்தது ஒரு பாரசீக ரோஜா !
வீசிய புழுதிப் புயலில் வேரறுந்து
பாலை மணலில் புதைந்து போனது !
நெடும் பயணம் கொண்ட
பாலைப் பயணியின் ஒட்டகத்தின் காலடியில்
இடறி வெளிப்பட்டது ரோஜா செடி !
ஏதென்று வாடிய மலர்ச் செடியை கையிலெடுத்தான்
தோல்பை நீரினால் வாட்டம் போக்கி
எடுத்துச் சென்றான் தன் இல்லம்
தொட்டியில் பூத்துக் குலுங்குகிறது
பாலைவனத்து ரோஜா !
---கவின் சாரலன்