பாலைவனத்து ரோஜா

பாலைவனத்தில் தென்றலுக்கு
காத்திருந்தது ஒரு பாரசீக ரோஜா !
வீசிய புழுதிப் புயலில் வேரறுந்து
பாலை மணலில் புதைந்து போனது !

நெடும் பயணம் கொண்ட
பாலைப் பயணியின் ஒட்டகத்தின் காலடியில்
இடறி வெளிப்பட்டது ரோஜா செடி !
ஏதென்று வாடிய மலர்ச் செடியை கையிலெடுத்தான்
தோல்பை நீரினால் வாட்டம் போக்கி
எடுத்துச் சென்றான் தன் இல்லம்

தொட்டியில் பூத்துக் குலுங்குகிறது
பாலைவனத்து ரோஜா !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Feb-17, 10:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 215

மேலே