நிஜம்

நிஜத்தை மறந்து ,
நிழலை நேசித்தேன்.

கடலை மறந்து,
நுரையை நேசித்தேன் .

பூவை மறந்து,
பனித்துளியை நேசித்தேன்.

நிலவை மறந்து,
ஒளியை நேசித்தேன்.

நிலையானதை விடுத்து,
நிலையற்றதை நேசிப்பது,
மனித குணமோ?

எழுதியவர் : (21-Feb-17, 8:53 pm)
சேர்த்தது : Sarah14
Tanglish : nijam
பார்வை : 77

மேலே