திரும்பிய திசை எங்கும்

சோலைக்குயிலே சோகம்
ஏனம்மா......?
மூலைக்குள் முடங்கும்
காரணம்
சொல்லம்மா.....?
கண்ணீரின் வலிகளை
கண்களும் மறுக்குமா?
இல்லை
மறக்குமா??

நேசம் தொலைத்த
நெஞ்சம்
பாசம் கேட்டுத்
தவிக்குது.....தேசம்
கடந்து
துடிக்குது.....உன்னோடு
சேர்ந்திட......
என்னுயிர் மட்டும்
உனக்குச்
சொந்தம்......!!

நினைக்கின்ற
கணமெல்லாம்
நனைகின்ற
கன்னங்கள்.....
நிஜமாய்
என்னைச் சிதைக்குது......
சிதையில்
விழுந்த
நிலைபோல
மாறிப்போனேன்.....!!

ஒவ்வொரு இரவும்
தனிமையின்
உச்சம்.....விடிகாலை
தெரியாமல்
உயிர் போகுமோ
என்கிற
அச்சம்.....!!

அன்பைத் தொலைத்த
அனாதையாய்....
பாசம்
தொலைத்த பாவியாய்.....
அன்றுமுதல்
இன்றுவரை
தொடர்கதை
ஆன
தனிமை வாழ்வு......
என் இனிமையை
தொலைத்த
நிகழ்கால
நிகழ்வு.......!!

விடியும் வரை
பேச சொல்லி.....
என் தூக்கம்
தொலைத்த
வில்லி.....என்
வாழ்க்கை முடியும்
நிலையிலும்
வரவே இல்லை......!!

வருந்துகிறேன்
ஆனாலும்
என்
அன்பே.....
உன்னை விரும்புகிறேன்......
நாட்களை
எண்ணிக்கொண்டே
உன்னை
நெருங்குகிறேன்.....
நீ......வருவாய்
என்று
சொல்லிச் சொல்லியே......!!

இரவு பகலை தேட.....
என்மனமோ
உன்னுருவம்
தேடுது.....நிழல்
கூட நிம்மதிதான்
நிஜம்தான்
நிஜமடி.....நீ வந்தால்
என் வாழ்வும்
நிச்சயம்.....இல்லையெனில்
இருப்பதே
அச்சம்.....!!

காதோரம்
கதைபேசும்
காலை மாலை....
கண்முன்னே
கனவாகிப்
போனதால்.....
என் வாழ்க்கை
கண்ணீர்ப்
பூக்களை
காதல் மீது
அள்ளித்தூவுது.....!!

என் புன்னகைப்
பூங்காவில்
பூத்துக் குலுங்கிய
பூந்தோட்டமே....
என் மனக்கிளிகள்
தங்கிப்போகும்
மாஞ்சசோலையே.....
உன்னைக்
காணாமல்
என்னைத் தொலைத்து
தொலைவானமாய்
போனேனே நான்......!!!

காதல் மஹாராணி
வந்துவிடு.....நீயின்றி
நகரும்
நாட்கள் தொடர்கதை
என்றானது.....
உனக்கும் எனக்கும்
ஏதோ பந்தம்....
உன்னோடு வாழ
உனக்கு நான்மட்டும்தான்
அழியாத
சொந்தம்.....!!

மாலையிடுவேன்
என்கிற
நம்பிக்கையில்
காலை மாலை......நம்
நினைவுப் பூக்களை
பறித்துச்
சேர்க்கிறேன்.....மாலையிட்டு
உன்னிடம்
என்னைக்கொடுக்க......!!!

நித்திரையில்
நெற்றியிலே
நீ இட்ட
முத்திரை....

தூங்குவதாய்
உன்னை
ஏமாற்றி நான்
வாங்கிய
சந்தோஷங்கள்.....

வலிய சண்டை
செய்து.....
தேன்சுவை இதழ்
பருகி....
தீர்ந்துபோன
யுத்தங்கள்
இன்று
தீர்ந்தே போனதே......!!!?

வந்தால்
என்னைத் தருவேன்.....
இல்லையேல்
உன்நினைவுகளோடு
என்னைத்
தொலைப்பேன்.....!!

திரும்பிய
திசை எங்கும்
விரும்பாத
சோகங்கள்....என்னை
விரட்டுது......
விரக்தியில்
விதிமேல்
பழிபோட்டு
கதிகலங்கி
நின்றேன்.....!!

இதயம்
தொலைத்த
அந்த
நிமிஷங்கள்
இன்றுவரை
சுகமே.....சுமையானதே
தொலைவினில்
தொலைந்து
போனதால்......!!

எழுதியவர் : thampu (22-Feb-17, 1:26 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 279

மேலே