என் சின்னவள்

சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
அவள் கொஞ்சும்
மழலை மொழியிலே
முத்தம் ஒன்னு கேட்பாள்...

நீல வண்ண
கண்ணனைப்போல்
குறும்பு பல செய்வாள்
நித்தம் எந்தன்
மடியில் அமர்ந்து
குட்டி கதை கேட்பாள்...

முயல்கதை யானைகதை
பூனைகதை புலிகதை
ஆர்வத்துடன் கேட்பாள்
குட்டி கதை முடியுமுன்பே
தூங்கி என் மடியில் சாய்வாள்

அவள் பிஞ்சுபாதம் என்
நெஞ்சில் பட்டால்
என் கவலைகள் தீரும்
அவள் வஞ்சிக்கொடியாய்
வளற என் இதயம்
இறைவனிடம் வரம் கோரும்

என் பொழுதுகள் அவளாலே
அர்த்தமாகின்றன
அவளின் முகம் பார்த்தே
என் பசி அனைத்தும் தீருகின்றன
இறைவா உனக்கு கோடி
நன்றிகள் என் வாழ்வில்
இந்த சின்னவளை இணைத்ததிற்காக....

எழுதியவர் : செல்வமுத்து.M (22-Feb-17, 4:00 am)
பார்வை : 135

மேலே