காதல் ஒரு உயிர்மெய்

கண்ணா நீ அகத்தி மரம் என்றால்
நான் அதை இருகிபடரும் வெற்றிலைக் கொடி
உன் நிழலில்தான் தொடரும் என் வாழ்வு

நான், நீதான் எந்தன் உயிர் என்றபோது
நான் தான் "மெய்" என்று என்முன் நின்றாய்

கண்ணா உயிரும் மெய்யும் சேர்ந்து
"உயிர்மெய்யானால்" வாழ்வின் உச்சம்
என்பது ஞானியர் வாக்கு
வந்திடுவாய் மெய்யே இந்த
உன் உயிரோடு சேர
இன்பத்தின் எல்லை அது
நீ அறியாயோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Feb-17, 4:47 pm)
Tanglish : kaadhal oru uyirmey
பார்வை : 120

மேலே