கண்ணீரில் தத்தளிக்கும் ரோஜா 555
அன்பே...
நீயும் நானும் நெருங்கி
பேசிய கடற்கரை...
நினைவில்லாமல் நீயும் நானும்
காதலில் மூழ்கிய நாட்கள்...
நேற்றைய நினைவுகள்
நாளைய கனவுகள்...
நீண்டு விரிந்த உன்
நெடுங்கூந்தலில்...
நான் முகம்புதைத்து உன்
கழுத்தில் முத்தமிட்டது...
என் நெற்றி பரப்பின்
வியர்வையை...
நீ உன் இதழ்களால்
மெல்ல எடுத்தது...
நித்திரையின்றி என்னை நீ
தவிக்கவிட்ட நாட்கள்...
எல்லாம் நீ
மறந்துவிட்டாய்...
உன் நினைவுகள் மட்டும் என்னை
நிம்மதியின்றி கொள்ளுதடி...
மலராத மொட்டாக நான்
மலர்ந்த ரோஜாவாக நீ.....