வலிகள் - சகி

அன்பே .....

துணையாக வருவாய்
என்று எண்ணி தான்
உன் காதலை ஏற்றுக்கொண்டேன் ......

என் அனைத்து
வலிகளுக்கும் சொந்தமானவை
நீ தரும் வார்த்தைகள்
என்பதை மறந்துவிட்டாய் ....

நம்பிக்கையும் என்றும்
மாறாத அன்பும்தான்
உண்மைக்காதல் என்பதை
மறந்துவிட்டாயோ .......

நித்தம் நித்தம்
வலிகளையும் வேதனைகளையும் சுமக்கிறது
என்னிதயம் ........

மறந்து சென்ற
சில வலிகளையும்
உன் வார்த்தையின் வடிவமாய்
தந்து செல்கிறாய் ......

என்று உணர்வாய்
என்னை ?

எழுதியவர் : sagi (22-Feb-17, 9:38 pm)
பார்வை : 645

மேலே