என்னவனே - சகி

நாம் பேசாத
நிமிடங்கள் தானே
நம் காதலில் அதிகம் .....

பேசதெரியவில்லை
என்கிறாய் ......

உன்னுடன் இருந்த
நிமிடங்களும் நினைவுகளும்
மட்டும் தான் உண்மையான
சந்தோசம் எனக்கு ......

பேசத்துடிக்கும் என்னிதயத்துக்கு உன்
இதழ்கள் கொடுத்த வார்த்தைகளின் வலிகளின்
நினைவு வந்துசெல்கிறது ......

நாம் பேசும்
நிமிடங்களுக்காக காத்திருக்கிறேன் .......

உன்காதலை நீ
என்னிடம் சொல்லிய
நிமிடம் உன்னிலிருந்து
காதல் வேண்டும்
என் ஆயுள் முழுவதும் .......

என்னை உணர்ந்தால்
விடைக்கொடு நம்
மௌனத்திற்கு .......

உண்மையான நம்பிக்கையும்
காதலும் இருந்தால் மட்டுமே .....

இல்லையெனில்

நம் மௌனம்
இன்றுபோல் என்றுமே
தொடரும் நம் ஆயுள்வரை .....

உணர்ந்து விலகிவிடுவேன்
இம்மண்ணிலிருந்தும்
உன்னிலிருந்தும் நிரந்தரமாய் ......

எழுதியவர் : சகி (23-Feb-17, 6:10 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 413

மேலே