அவர் அவர் அவர் அவர்கள்

மூன்று மனிதர்கள் . இவர்களிடம் பெரிய பின்புலம் இல்லை , தனது திறமையினால் , சாதுர்த்தியத்தால் உலகின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பிய மூவர். மூவரும் ஒன்று பட்டிருந்தால் , இரு தேசங்களை மட்டும் அல்ல , உலகத்தின் சரித்தரத்தை மாற்றிப்போட்டிருப்பார்கள் .
சாதாரண மனிதர்களாய் பிறந்து , சரித்தரம் படைத்த மூவர் ,காலத்தின் சதுரங்கம் இவர்கள் வழி போட்டது ஒரு படுகொலை ,ஒரு அவமதிப்பு , ஒரு லட்சியம் , அதன் விளைவு ?????

அவர் !

பெண்களின் கண்ணீர்
சாம்ராஜ்யங்களை அழிக்க
வல்லது !
தனது மன வலிமையால்
விஸ்வரூபம் எடுத்த
அவர் காத்திருந்தார் !

அவர் !

அரசியலின் ராஜகுரு !
தவறாக உரசப்பட்டதின்
விளைவு ?
மதியாதார் தலைவாசல்
மிதியாதே!
அவர் காத்திருந்தார் !

அவர் !

சிங்கம் அல்ல !
சாதி இல்லா
சமுதாயம்
பாடத்தில்
மட்டும் படித்ததை
நடத்திக் காட்டியவர்!
இன விடுதலைக்காக
அவர் காத்திருந்தார் !

மனதின் தராசில்
அவரவர் நியாயம்
உயர்ந்தது !
எதற்கும் வளையாத
மனவலிமை உடைய
மூவர் !
காத்திருந்தார்கள் !

யார் வென்றார்
என்பதை விட !
இந்தக்கணம் ....

அவர்கள்

இறந்தோர் கொடுத்து
வைத்தவர்கள் !
இருப்போர்
மன நோயாளிகளாய்
வாழ்கின்றனர் !
உயிரை மட்டும்
வைத்துக்கொண்டு
அவர்கள் காத்திருக்கிறார்கள் !

நாம்??????????????

- பாவி

எழுதியவர் : பாவி (24-Feb-17, 3:09 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 44

மேலே