பிரிவு
எந்தன் வாழ்வில் நீ வந்ததுதான் எனக்கு
மிக்க மகிழ்ச்சியடா...
எந்தன் இவ்வாழ்க்கை உன்னோடு பாதியில்
தொடங்கிய உறவுதானடா...
இனியெல்லாம் முழுமையாய் உன்னுடனே
தொடரத்தான் தோனுதடா...
யாவும் உன்னோடுதான் பகிர தோனுதடா...
ஊசித்துரலிலே உன்னோடு கைகோர்த்து வெகுதூரம்
நடக்கத் தோனுதடா...
உந்தன் ஒருநாள் பிரிவில்கூட என்மனம்
உன் வருகைக்காய் ஏங்குதடா...