தலைவர் என எவரும் வேண்டாம்

தலைவர் என எவரும் வேண்டாம் - தன்
இனமானம் காக்க வந்த மரபணு நாங்கள்


இணையத்தில் தானே இவர் போர் - எனவே
இல்லை ஓர் அக்கப்போர் - என
இனிமை கனவு மிக கண்டீர்

திமில் சிலுப்பி, கொம்பு சீவி
துள்ளி வந்தது பார் இளம் காளைகள்

தலைவர் என எவரும் வேண்டாம் - தன்
இனமானம் காக்க வந்த மரபணு நாங்கள்

முறத்தால் புலி விரட்டிய
மற தமிழச்சி கதையை கேட்டு
நகைத்து சென்ற கூட்டம் எல்லாம்
திகைத்து நின்ற கதையை
வங்கக்கடல் அலையும்
சொல்லிக்கொண்டு சீறுதுபார்

தலைவர் என எவரும் வேண்டாம் - தன்
இனமானம் காக்க வந்த மரபணு நாங்கள்

குடிகார கூட்டம் என்றும்
காமூக நாய்கள் என்றும்
ஊளையிட்ட நரி கூட்டம் எல்லாம்
எங்கள் பண்பாடும், தனி மனித
மேம்படும் கண்டு
நடுங்கி நின்ற கதையை
ஓங்கி கொட்டுது பார் தமிழர் பறை


ஆனந்த விகடத்திலே
ஆண் பால் பெண் பால் - சொல்லும்
அன்பர்
தப்பாமல் சொல்லுவார்
தமிழ்க்குடியின் தனிமாண்பு

தலைவர் என எவரும் வேண்டாம் - தன்
இனமானம் காக்க வந்த மரபணு நாங்கள்

வீட்டை காக்க நாங்கள் வளர்த்த
நாயும் சிலசமயம்
எங்களை கடிக்கவும் செய்யும்
தவறில்லை,
அன்றி அதற்க்கு வெறிபிடித்தால்
சங்கிலி கொண்டு பிணைக்கவும்
எமக்கு தெரியும்

தலைவர் என எவரும் வேண்டாம் - தன்
இனமானம் காக்க வந்த மரபணு நாங்கள்

அரசு மருத்துவமனையில் மாண்டவனும்
ஐநூறு கூட சட்டைப்பையில்
இல்லாதவனும்
ஆண்ட மண் இதுதானடா
அவனெல்லாம் எங்களில்
ஒருவன்தானடா
அதனாலே ஆண்டவன் என்று நின்றானடா

இனி அஞ்சுக, அஞ்சுக - காண்
எங்களைபோல் அல்லாதவன்
எவனும் காலடி படாது - காண்
எந்த அவையிலும் சரி
எந்த சபையிலும் சரி
முன்னோட்டம் இது என
எம் மற காளைகள்

திமில் சிலுப்பி, கொம்பு சீவி
துள்ளி குதித்து வருகுது காண்


தலைவர் என எவரும் வேண்டாம் - தன்
இனமானம் காக்க வந்த மரபணு நாங்கள்

எழுதியவர் : சிங்கவேள் குன்றன் (24-Feb-17, 4:15 pm)
சேர்த்தது : singavelkundran
பார்வை : 810

மேலே