மனிதக்குருவியின் ஓலம்

மனிதக்குருவியின் ஓலம்

பசியில் பரிதவிக்கும்
ஏழையின் சோகம்
காசியில் கலங்கும்
முதியவரின் முகம்
ஊனத்தால் ஊசலாடும்
இயலாதவரின் பாகம்
விவசாயினை தவிக்க
செய்யும் கார்மேகம்
கொடுரனால் சீரழிக்கப்பட்ட
மங்கையின் தேகம்
இயற்கையை அழித்து வரும்
ஈனர்களின் வேகம்
குடிகளை கொன்றுவரும்
மதுவெனும் மோகம்
இதனைப்படைத்து ருசிக்கும்
இறைவனுக்கு இதனை
கூறும் நான்ஆகினேன் அவனின்
கானம் பாடும் கவிதையாய்

எழுதியவர் : ந.நரசிங்கமூர்த்தி (25-Feb-17, 1:54 am)
பார்வை : 271

மேலே