காதல் காத்திரு 2
காதல்.... காத்திரு....
பகுதி 2
வொயிங்.. வொயிங்..வொயிங்...
ஆம்புலன்ஸில் கொண்டு போய் கதிரை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். உடன் அஞ்சலி அழுது கொண்டே செல்கிறாள்.
கதிர்...கதிர்...
அஞ்சலியின்அழுகுரல் மங்க.. ஐசியு க்குள் அழைத்துச் செல்லப்படுகிறான் கதிர்...
ஐசியு வார்டின் வெளிப்புறம் அஞ்சலி அமர்ந்திருக்கிறாள்..
30 நிமிடங்களுக்குப் பிறகு
அருகேயுள்ள பொது சிகிச்சைப் பிரிவில் இருந்து காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டு கேமராமேன் வருகிறார்.
கேமராமேன்:
அஞ்சலி.... அந்த பையனுக்கு எப்டி இருக்கு.. டாக்டர் ஏதாது சொன்னாரா
அஞ்சலி:
இல்லண்ணா.. எனக்கு பயமா இருக்கு..
கேமராமேன்:
நீ வீட்டுக்கு போமா.. நான் பாத்துக்குறேன்.
அஞ்சலி:
இல்லண்ணா.. நான் கதிர பாக்காம போமாட்டேன்..
கேமராமேன்:
சொன்னா கேக்கமாட்ட.. நா போய்ட்டு டீ வாங்கிட்டு வரேன்
அஞ்சலி அழுதுகொண்டே தலைகுனிந்துகொள்கிறாள்.
திடீரென்று யாரோ அஞ்சலியை எழுப்புகிறார்கள்.. அஞ்சலி சுயநினைவுக்கு வந்து பார்க்கிறாள். அது அவள் தோழி சினி....
சினியை பார்த்ததும் கட்டியணைத்து அழுதுவிடுகிறாள் அஞ்சலி...
சினி: பொறுமையா இரு.. அழாத.. வா வீட்டுக்கு போய்டலாம்..
அஞ்சலி: என்னால இவன விட்டுட்டு வரமுடியாது..
சினி கண்ணத்தில் ஓங்கி அறைகிறாள்..அஞ்சலி அழுதுகொண்டே மீண்டும் அமர்கிறாள்.
சினி: ஸ்வீட்டி.. வாடி.. வந்துரு.. அவனுங்க ரௌடி பசங்க.. ஏதாது பண்ணிடுவாங்கடி
அஞ்சலி: என் கதிர் என்ன பாத்துப்பான்
சினி : பைத்தியமாடி நீ.. ஒரு எழவுக்கும் ஆகமாட்டான் அவன்.. திருப்பி அடிக்க கூட அவனால முடியாது.. இதுல இப்போ குத்துப்பட்டு கிடக்குறான்..
அஞ்சலி: ஆமா பைத்தியம்தான்..
மருத்துமனையிலுள்ள அனைவரும் திரும்பி பார்க்கின்றனர்..
செவிலியர் ஒருவர் வந்து இப்படிலாம் கத்தக்கூடாதுமா னு சொல்லிட்டு போனாங்க
சினி: சரி வா.. வெளிய நிப்போம்..வீட்டுக்கு வேனா.. வெளிய உக்காந்து பேசலாம் வா..
அஞ்சலி: கதிர்... கதிர்... நீ இல்லாம போய்ட்டா நா என்ன ஆவேன்டா. என்று புலம்புகிறாள்
சினி: லூசாடி நீ.. அவன் பேர சொல்லி பொலம்பி்கிட்டு இருக்க..
அதற்குள் வெளியில் சென்ற கேமராமேன் திரும்பி வருகிறார். வந்தவர் இவர்கள் பேசியதை கேட்டுவிட்டு..
கேமராமேன்: விவரம் தெரியாம பேசாதமா.. இந்த பொண்ண குத்த வந்தாங்க அவனுங்க.. அந்த தம்பிதான் குறுக்க வந்து காப்பாத்திச்சி..
சினி:அது இல்லண்ணா எனக்கு பயமா இருக்கு.. எதுக்கு இவளுக்கு இவ்ளோ ரிஸ்க்கு
அஞ்சலி: நா எடுக்கறது இல்லடி ரிஸ்க்கு... என் கதிர் எடுத்துருக்கான் பாரு அதுதான் ரிஸ்க்கு... எனக்காக அவன் ஒரு கொலை பண்ணிருக்கான்... அதுவும் அவன் சொந்த அண்ணன....
......... To Be Continued........
காதல் .... காத்திரு.... 2