காதல் காத்திரு 8

அஞ்சலி அடைபட்டுள்ள இடம்

சித்தார்த்தை கதிராக நினைத்து அஞ்சலி பேசுகிறாள்

கதிர் (சித்தார்த்) : அஞ்சலி.. வா இங்கிருந்து போயிடலாம்.. அவனுங்க வரதுக்குள்ளாடி போய்டலாம்..

சினி: ஆமா அஞ்சலி...போய்டலாம்.. இந்த சித்தார்த் இப்டி பண்ணுவானு நினைக்கவே இல்ல.. பொறுக்கி நாயி

சித்தார்த் சினியை முறைக்கிறான்.. சினியும் அவனை பார்த்து கண்ணடிக்கிறாள்.

அஞ்சலி: ஹே.. அவன திட்டாத.. என்னதான் இருந்தாலும் அவன நா காதலிச்சிருக்கேன்..

சினி: என்னடி.. கதிர் அ பக்கத்துல வச்சிக்கிட்டே இப்டி பேசற..

அஞ்சலி: ஆமாடி... கதிர் தான் என்ன லவ் பண்றான். நான் இல்ல... ஆனா அவன்

இடைமறித்து பேசுகிறான் சித்தார்த்

சித்தார்த்: ஆமா சினி.. உண்ம தான்... அஞ்சலி... அந்த பேப்பர்ஸ்லாம் குடுத்துடுடா.. நமக்கு எதுக்கு வம்பு...

அஞ்சலி: என்ன கதிர் நீயே இப்படி பேசற.. எனக்காக உன் அண்ணனயே போட்டு அந்த அடி அடிச்ச... அவன் செத்துட்டானுல நா நினைச்சேன்.. இப்போ இப்டி பேசுற..

சித்தார்த்: அஞ்சலி...நா எப்போ

சித்தார்த் நினைத்து பார்க்கிறான்... இரண்டு மாதங்களுக்கு முன்.....


காதல்..... காத்திரு.... 8

எழுதியவர் : உதயகுமார் (25-Feb-17, 2:49 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 323

மேலே