பெண்மை வரமா சாபமா
இப்பிறவி வரமா ?
இல்லை எங்களுக்கு சாபமா ????
பெண்களை சதைகளுக்கும்
இச்சை ஆசைகளுக்கு
மட்டுமே இறைவன்
படைத்துள்ளானோ ???????
பார்வையிலே பெண்மையை
பசியாற்றிக் கொல்லும்
மிருகங்களில் நடுவில்
பிணமான எங்கள் நடைப்பயணம் .....
பெண்ணென்பவள் சில
ஆண்மிருகங்களின்
அடங்கா உடல் பசிக்கும்
அழியும் உயிராகிறாள் ..........
இன்றைய சமுதாயத்தில்
சில காமவெறிக்கொண்ட
காமுகனுக்கு இறையாகிக்கொண்டிருக்கும்
சிசுக்களும் குமரிகளும்
பலியாடுகின்றன .......
மிகமிக கொடுமையான
கேவலமென்னேவேனில்
மாற்றானின் மனைவி
என்றும் பாராமல்
இச்சைக்கு இறையாக்கி
அழிக்கின்றனர்.......
மலர்ந்து வாழவேண்டிய
மலர்கள் அனைத்தும்
மண்ணோடு மண்ணாக
சாம்பலாகிறது அரும்பிலே......
என்று விடியும்
எங்கள் நல்விடியல்?????????????????????????????
விடை கிடைக்குமா ????????
அரசு நடவடிக்கை
மேற்கொள்ளுமா ???????????
உதவும் உள்ளங்கள் யார் ?????????
விடையே இல்லாத
கேள்வி தான் இப்பிறவி
எங்களுக்கு ??????