அவள் எனக்கு உயிரெழுதில் முதலெழுத்து

அருமையான காட்சி ஒன்று
அரங்கேரிய நாள்
அந்த நாள் தான்.

அப்படியென்ன
அதிசயத்தில்
அதிர்ந்த காட்சி?

அடக்கம் இல்லாமல்
அங்கும் இங்கும்
அலைந்துகொண்டிருந்த
அலைகளும்
அடங்கிவிட்டது
அந்த காட்சியை கண்டவுடன் !

அரை நிலவும் தன்
அறைக்கதவுகளை
அடைத்துக்கொண்டு
அமைதியாய் இருந்தது
அந்த காட்சியை கண்டவுடன் !

அப்படி ஓர்
அற்புத காட்சி!

அன்று கார்த்திகை தீபம்
அன்னநடையிட்டு
அவள்
அழகாய் வந்து
அகல் விளக்கேற்றி
அலங்கரித்த கட்சி

அன்று
அகல் விளக்குகளைவிட
அவள் விழிகள்
அழகாய் இருந்தன ....!

அபிநயம் பேசும்
அவளது விழிகளில்
அடைக்கலம் புகவே
அருகினில் சென்றேன்

அடடா இதுயென்ன
அழகிய சாபம்
அரைநொடி பொழுதில்
அடிமையாய் போனேன் !

எழுதியவர் : அ.வீரபாண்டியன் (26-Feb-17, 7:22 pm)
சேர்த்தது : அ வீரபாண்டியன்
பார்வை : 114

மேலே