நட்பிற்கு வாழ்த்துக்கவி - 2

பண்பாளர் திரு காங்கேயன் அவர்களுக்கு
புத்தாண்டு வாழ்த்துக்கவி

சாத்தமங்கலத்தில் பிறந்த
நாங்கள் பார்த்த மங்கலம் நீ
அறிவில் சிறந்த திமிங்கலம் நீ

காங்கேயத்தின் சிறப்பு காளை
காங்கேயமே சொல்லட்டுமா
உன் சிறப்புகளை

காணும் கோப்புக்களை
பூக்களாய்ப் பார்ப்பவன் நீ

உன் கை கண்டப் பூ உழைப்பூ
உன் மெய் காணாப் பூ அலுப்பு

நீ பிழைக்கு வைக்கும் பூ நெருப்பு
நீ பிழைக்க வைத்தப் பூ நிறுவனத்தின் கை இருப்பு

உனக்கு பிடித்தப் பூ அன்பு
நீ படித்தப் பூ பண்பு

உன் கண்ணில் படும் பூ தப்பு
அதுவே உன் தனிச்சிறப்பு

உன் முகம் விரும்பும் பூ சிரிப்பு
உன் அகம் விரும்பும் பூ நட்பு

உன்னுள் இதனைப் பூக்களைக் கண்டு
என் உடம்பு கொள்கின்றது பூரிப்பு

பைல் விதிகளை
நைல் நதிகளாய் மாற்றும்
திறன் படைத்தவன் நீ

உன் மனம்
தெளிந்த நீரோடையில்
கிடைக்கும் வைரக்கல்
நீ புதுவையில் பிறந்த
புது வெய்யில்

நீர் நனைப்பதனால்
வெய்யில் நனைவதில்லை

திறமை நேர்மை பொறுமை
இவைற்றைக் கலந்தல்லவா
உன் பேனாவிற்கு மை ஊற்றுகின்றாய்

உன் பேனா மை குறையும்போதெல்லாம்
நன்மை நிறைந்தது நிறுவனத்தில்

நீ அரசியலில் இடம்பெறாத சாணக்கியன்
அறிவியலில் சாதிக்கும் சாமர்த்தியன்

வனவில்லாய் உன் புகழ்
நீண்டிருக்கட்டும்
இந்நிறுவனத்தை ஆண்டிருக்கட்டும்
அதற்குத் துணையாய் 2017 ஆண்டிருக்கட்டும்

எழுதியவர் : நட்பு (26-Feb-17, 8:21 pm)
பார்வை : 402

மேலே